ஜாஸ்பர் இள வயதில் ரவுடியாக வலம் வருகிறான். ஊமைப் பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அவளுக்கு பிள்ளையும் பிறக் கிறது. எதிரிகள் ஜாஸ்பரின் மனைவியை கொல்கின்றனர். இதனால் கதறும் ஜாஸ்பர் தன் பிள்ளையை அனாதை விடுதியில் விட்டுவிட்டு செல்கிறான். தான் அனாதை என்ற எண்ணத்தில் வளரும் அவன் (விவேக் ராஜகோ பால்) தன் தோழியை மணந்து பிள்ளைபெற்று வங்கி மேனேஜராக உயர்கிறான். அவனை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் ஜாஸ்பர் தன் வீட்டை அவர்களுக்கு வாடகை விடுவது போல் விட்டு அருகில் வரவழை கிறார். இந்நிலையில் வங்கி கொள்ளைக் கூட்டம் ஒன்று விவேக்கை கடத்தி செல்கிறது. இதையறிந்து கோபம் அடையும் ஜாஸ்பர் தனி ஆளாக மகனை கடத்தியவர்களை தேடி செல்கி றான். ஜாஸ்பரால் மகனை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் தருகிறது.வயதான ஜாஸ்பர் வேடத்தில் நடித்திருக்கும் சி.எம்.பாலா, ஆறடி உயரம் அதிரடியான உருவம் என மிரட்டலாக இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாகவும் இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்.ஹிட்மேனாக வரும் நடிகர் வயதனாலும் வாலிப முறுக்கோடு சண்டைபோடுகிறார்.கடத்தல் கூட்டம் விவேக்கை கடத்தி அவரது விரல்களை வெட்டி பார்சல் அனுப்புவது திகில்.பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். கதைக்கு ஏற்றபடி இசையமைத்திருக்கும் குமரன் சிவமணி, தனித்து தெரியும் வகையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைப்பார் என்று நம்புவோம்.மணிகண்டராஜாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் இளமை பருவம் மற்றும் முதுமை பருவத்திற்கான ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ்.டி, வழக்கமான ஆக்ஷன் கதையை வித்தியாசமான ரூட்டில் பயணிக்க வைத்திருக்கிறார்
