யசோதா(சமந்தா) தன் தங்கையின் பராமரிப்பு செலவிற்காக வாடகை தாயாக ஒப்புக்கொள் கிறாள். அவரை வாடகை தாயாக்கும் நிறுவனம் வீட்டிலிருந்து தங்களது ஆடம்பர விடுதிக்கு அழைத்துச் செல்கிறது. வசதிகளுக்கு குறை வில்லாத அந்த விடுதியில் ஏற்கனவே பல இளம்பெண்கள் வாடகை தாயாக இருப்பதை கண்டு யசோதா திகைக்கிறார். விடுதியின் ஹெட் மதுபாலா (வரலட்சுமி) எல்லோருக்கும் உத்தரவுகள் கொடுத்து பராமரிக்கிறார். பிரசவத்துக்காக அழைத்துச் செல்லப் படும் பெண்ணோ, குழந்தையோ மீண்டும் திரும்பாதநிலையில் சந்தேகப்பட்டு அந்த ரகசிய விடுதியை பற்றி துப்பு துலக்குகிறார் யசோதா அதில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவரு கிறது. இதன் முடிவு என்ன என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் விளக்கு கிறது படம்.வித்தியாசமான படங்களையே செய்யும் இயக்குனர்கள் ஹரி ஹரீஷ் இந்தப் படத்திலும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து உள்ளனர் . எதற்காகப் பதிலித்தாய் மூலம் குழந்தைகள் பெறப்படுகிறது என்ற உண்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது . அழகின் கோர முகம் புரிகிறது .மொத்தப்படத்தையும் ஒத்தை ஆளாக தன் தோளில் சுமந்ந்திருக்கிறார் சமந்தா. வாடகை தாயாக அப்பாவி பெண் தோற்றத்தில் அந்த படோடோப விடுதிக்குள் அடியெடுத்து வைக்கும்போதே என்னவோ செய்யப்போகிறார் என்பது புரிந்து போகிறது. வயிற்றில் கருவை சுமந்தபடி அங்கு நடக்கும் எதிர்மறை நிகழ்வுகளை அவர் ஆராயத் தொடங்குவதில் இருந்தே வேகம் பிடித்து விடுகிறது.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு யானை பலம். ஒளி, வண்ணம் என்று எல்லா ஏரியாவிலும் அசத்தி இருக்கிறார் சுகுமார். மணி ஷர்மாவின் இசையும் சிறப்பு.பெண்களின் பேராதரவை பெரும் என்பதோடு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு கமர்சியல் படமாகவும் வெற்றி பெறும்
