சிறு வயதிலேயே தந்தையை இழந்த இரு பிள்ளைகளை தனி ஆளாய் வளர்த்து வருகிறார் தாய் ஆராயி (ஜானகி சுரேஷ்). இவர், தனது முதல் மகன் கரிகாலன் (லிங்கா) மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். இதனால் பொறாமை கொள்ளும் இரண்டாவது மகன் கோவலனுக்கு (ஆர்.எஸ்.கார்த்திக்) தன் அண்ணன் மீது கோபம் ஏற்படுகிறது. இதனிடையே தனது தாயை தவறான பார்வையில் பார்க்கும் ஒரு நபரை கரிகாலன் கல்லை கொண்டு அடித்து விடுகிறான். இதனால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் கரிகாலனிடம், சிறையில் சிலர் தவறான முறையில் நடந்து கொள்கிறார்கள்.மற்ற இடங்களில் உள்ள வட்டார வழக்கை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்களோ அதே போல வடசென்னை வட்டார வழக்கான கெட்ட வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் வெளியான ப்ரோமோவுக்கே ஏகப்பட்ட எதிர்ப்புகள் உருவான நிலையில், படமாக பரோல் எப்படி இருக்கு என இங்கே விரிவாக பார்ப்போம்..கரிகாலனாக நடித்திருக்கும் லிங்கா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னணி இசையுடன் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாஸ் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். தன்னுடைய எதார்த்த நடிப்பால் பல உணர்வுகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். கோவலனாக வரும் ஆர்.எஸ்.கார்த்திக் தன்னுடைய கோபமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அண்ணனை வெளியே எடுக்க இவர் போடும் திட்டத்தில் இவரின் நடிப்பு கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது. கோபத்தின் உச்சத்தில் மனிதர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை தங்களின் நடிப்பின் மூலம் இரு கதாநாயகர்களும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். கதாநாயகிகளாக வரும் கல்பிகா மற்றும் மோனிஷா முரளி இருவரும் கொடுத்த பணியை சரியாக செய்து முடித்துள்ளனர்.வடசென்னை மக்களின் வாழ்வியல், ஒரு வீட்டுக்குள் இருக்கும் மூவரின் மன உணர்வுகள், குறிப்பாகப் பெண்களின் உணர்வுகள்,கரிகாலன் வாழ்வில் நடக்கும் யாரும் கவனிக்க விரும்பாத இருண்ட பக்கங்கள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது பலம்.துவாரக் ராஜா கதையை அழகாக அமைந்திருந்தாலும் இவ்வளவு வன்மம் தேவையா? சில ஆபாச வார்த்தைகளும், காட்சிகளும் இல்லாமல் கதையை நகர்த்தியிருந்தால் அனைத்து வயது தரப்பினர்களும் படத்தை பார்த்திருக்கலாமே. சில காட்சிகளை நீக்கி, நரேஷனில் பயணித்திருந்தால் A சான்றிதழை தவிர்த்திருக்கலாம். மற்றபடி கதையும் களமும் சுவாரஸ்யம் தான்.
