14.7 C
New York
Wednesday, May 21, 2025

Buy now

spot_img

Padavettu

கேரள மாநிலத்தில், விவசாயத்தை முக்கியத் தொழிலாக – வாழ்வாதாரமாக – கொண்ட கண்ணூரில் உள்ள மலூர் என்ற கிராமத்தில் இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வசிப்பவர் ரவி (நிவின் பாலி). தடகள வீரர். ஆனால், ஒரு விபத்தில் ஏற்பட்ட கால்முறிவு அவர் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது. அதன்பின் அவர் சதா உள்முகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவராகவும், சோம்பல் மிகுந்தவராகவும் மாறிப்போகிறார். அவரது சிறிய வீட்டில் விளையாடுவதையும் சும்மா உட்கார்ந்திருப்பதையும் தவிர அவர் வேறு எதையும் செய்வதில்லை – மற்றொரு சம்பவம் அவரது வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை புரட்டிப் போடும் வரை,குயாலி (ஷம்மி திலகன்) ஒரு சூழ்ச்சி அரசியல்வாதி, தனது கட்சியின் ஆதரவுடன், தனது கிராமத்தில் காலூன்ற முடிவு செய்யும் போது, ரவியின் பாழடைந்த வீட்டை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முடிவு செய்கிறார். குயாலி தனது சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுயநல நோக்கங்களுக்காக, ரவியின் வீட்டைப் புதுப்பிக்க முடிவு செய்த பிறகு, ரவியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது அந்தச் சம்பவத்தின் அவமானம் ரவியை சிறந்த விவசாயியாக மாற்றுகிறது, அந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை நாம் படவெட்டில் பார்க்கிறோம்.ஜே எஸ் பி கட்சியின் தலைவராக வரும் வில்லன் நடிகர் ஷம்மிதிலகன் மலையாளத் திரைப்பட உலகிலும் தமிழ் திரைப்பட உலகிலும் கலக்கிய நடிகர் திலகனின் மகன் தனது தந்தைக்கு இணையாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார்,விவசாயிகள் பாதிக்கப்படும்போதும், சுயநல அரசியல்வாதிகள் தங்களின் சூழ்ச்சி விளையாட்டுகளைத் தொடரும்போதும், ஒரு சாமான்ய மனிதன் பொங்கி எழுந்து இந்த சமூக அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர போராடுகிறான்’ என்ற ஒருவரிக் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் லிஜு கிருஷ்ணா. படம் முடியும் தறுவாயில் நாயகனும், விவசாயிகளும் எழுப்பும் முழக்கங்களில் பிரசார நெடி இருந்தாலும், அவை பார்வையாளர்களின் நரம்புகளை முறுக்கேறச் செய்வதோடு, இயக்குனரின் அரசியல் சார்பையும் பிரகடனப்படுத்துகின்றன. பாராட்டுகள்.ரவி என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான வளர்ச்சியையும், அவர் கடந்து செல்லும் மாற்றங்களையும், நமது சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களையும் லிஜு கிருஷ்ணா முன்வைத்துள்ளார். ரவியின் வலி, காதல், பின்னடைவு, பிழைப்பு, ரவி முன்வைத்த புரட்சிக் கருத்துகள் என அனைத்தையும் ஆழம் குறையாமல் முன்வைத்திருப்பதோடு, ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் படத்தைத் லைம்லைட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார் லிஜு கிருஷ்ணா

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE