எடிட்டர் மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ஆகிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வாழ்த்தி பேசியதாவது:-
மோகன் ராஜா, ஜெயம் ரவி இணைந்து வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.
ஜெயம்' ரவி பேசும்போது,
எங்கள் குடும்பத்திற்கு இன்று முக்கியமான நாள். எங்கள் பெற்றோருடைய வாழ்க்கையின் சாராம்சத்தைக் கொண்டாடும் விழா. பாக்யராஜ் அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள மனிதர். எங்கள் குடும்பத்தையும், என்னையும் என் அண்ணாவையும் சினிமாவில் வெற்றிபெற வைத்து மகிழ்ந்த மனிதர். என்னை முதன்முதலாக கண்டித்தவர் பிரபு சார் தான். அண்ணா கூறியதுபோல் என்னுடைய முதல் இயக்குநரும் அர்ஜுன் சார் தான். எனக்கு என்னையே அடையாளம் காண்பித்தவர் டைரக்டர் ஜனநாதன் தான். சமத்துவத்தைப் பற்றி நான் கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். நான் முதன்முதலாக பணியாற்றியது தாணுவிடம் சாரிடம் தான்.
நடிகர் அர்ஜுன் பேசும்போது,
அப்பா எடிட்டர், அம்மா இரட்டை எம்.ஏ., பட்டம் பெற்றவர், மூத்த மகன் இயக்குநர், இளைய மகன் நடிகர், மகன் பல் மருத்துவர் என்ற சிறந்த குடும்பத்தின் சிறப்பான விழா. எடிட்டர் மோகன் படத்தில் நான் நடித்த தெலுங்கு படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்காக பேசிய ஊதியத்தொகைக்கும் மேலாக எனக்கு கொடுத்தார். அவரின் பண்பைக் கண்டு நான் வியந்தேன் என்றார்.
வரலட்சுமி மோகன் பேசும்போது,
இவ்விழா நூல் வெளியீட்டு விழா மாதிரியே தெரியவில்லை. அனைவரும் எங்கள் குடும்பத்தினர்களாகவே கலந்து கொண்டார்கள்.
எங்களுக்கு திருமணமானதும் என் கணவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை, நீ என்னுடைய இரண்டாவது மனைவி என்றார். அவருக்கு தொழில் தான் முதல் மனைவி. நாங்கள் எடுத்த முதல் படம் ‘ஜெயம்’ என்பதால் ஜெயம் குடும்பத்தார் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ், தயாரிப்பாளர் AL. அழகப்பன், டைரக்டர் மனோஜ்குமார், பாண்டியராஜன், SP.ஜனனாதன், கலைசெல்வி புலியூர் தேசிகன், கமலா வள்ளியப்பன், ரவிவர்மா, பாடலாசிரியர் காமகோடியன், பா.விஜய் , விவேகா ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக, எடிட்டர் மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ புத்தகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட நடிகர் அர்ஜுன் பெற்றுக் கொண்டார். வரலட்சுமி மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை ஷோபா சந்திரசேகர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது,
‘தனிமனிதன்’ புத்தகமும், ‘வேலியற்ற வேதம்’ புத்தகமும் இவர்களின் குடும்பத்திற்கு காலத்தால் அழியாத பெட்டகமாகவும், கருவூலமாகவும் அமையும் என்றார்.