முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கான படம் போலவும் இரண்டாம் பாகம் காதல் கதையாகவும் சொல்லாவந்து இருக்கிறார் இயக்குனர். அனால் இரண்டும் சரியாக முழுமையாக சொல்லவில்லை என்பது உறுதி காரணம் காதல் கதை ரொம்ப பழசு அஜித் பற்றிய விஷயங்களும் புதுசு இல்லை அதுவும் பழசு மொத்தத்தில் அரச்ச மாவு என்று தான் சொல்லணும் முதல் பாடத்திலும் அஜித் சமந்த காட்சிகள் அழுத்தம் இல்லை இரண்டாம் பகுதியுலும் காதல் காட்சிகள் புதுசு இல்லை குறிப்பாக கிளைமாக்ஸ் .
இந்தபடத்தில்R.K.சுரேஷ.இந்துஜா,சாந்தினி,பிரபாத்,தம்பிராமையா,மாரிமுத்து,அமுதவாணன்,சங்கிலிமுருகன்,சௌந்தர்,மற்றும் பலர் நடிப்பில் நடிகர் சூரி மற்றும் விதார்த் கௌரவ தோற்றதில் வருகிறார்கள்.படத்துக்கு ஒளிப்பதிவு ஜீவன் இளையவன் இயக்கம் ராஜசேதுபதி படத்தின் வில்லன் பிரபாத் தான் படத்தின் தயாரிப்பாளர்.
மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.
இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.
ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.
இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.
தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.
கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வில்லன் என்று பெயர் எடுத்த R.K.சுரேஷ் ஹீரோ பிரவேசம் அப்படி ஒன்னும் செட் ஆகவில்லை உங்கள் திறமை ஹீரோவுக்கு செட் ஆகவில்லை என்று தான் சொல்லணும் நீங்கள் வில்லனாகவே நடியுங்கள் அப்படி இல்லை என்றால் மேலும் பயிற்சி எடுத்துகொள்ளுங்கள்
சாந்தினி இந்துஜா இருவரும் தன் பங்குக்கு கொடுத்த வேலையை மிக சரியாக செய்துள்ளனர். தம்பிராமையா காமெடி கொஞ்சம் அருவியாக தான் உள்ளது பாவம் சூரி கும்பலோடு கோவிந்தா போட்டுவிட்டு செல்கிறார் விதார்த்யும் அதே அதே