போலி என்கவுண்டர் செய்யும் போலீஸ், அதை உண்மையிலேயே யாருக்காக செய்கின்றது என்பது தான் இந்த படத்தின் கதை. சமூகம் மீது உள்ள அக்கறையில் அல்ல, பெரும் புள்ளிகள் காப்பாற்ற பட வேண்டும் என்ற பின்னணியில் தான் போலியாக என்கவுண்டர்கள் நடத்தப்படுகின்றது என்பதை தான் தலையை சுற்றி மூக்கை தொட்டுள்ளார் இயக்குனர்.
படத்தின் மையக் கதையை விட்டு விட்டு படத்திற்கு தேவையில்லாத விஷயங்களாகவே வலுகட்டாயமாக திணித்து எடுத்துள்ளனர். அதிலும் கதை எதை நோக்கி போகிறது என இன்டர்வெல் வரை யாருக்கும் புரியவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரமே சமுத்திரக் கனி தான். கதாநாயகனை படத்தின் கிளை மேக்ஸ் காட்சியில் அறிமுகம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது சமுத்திரக்கனி இன்டர்வெல்லிற்கு பிறகு வருவது. ளை
சமுத்திரகனி என்றாலே கருத்து சொல்லவருபர் என்று தமிழ் சினிமாவில் நினைத்து விட்டார்கள் அதை நல்ல படத்தில் செய்ய வையுங்கள் என்ன கதை என்ன சொல்லவரும் என்பதை மறந்து எதை நோக்கி போகிறது என்பது யாருக்கும் தெரியாமல் படம் எடுத்துள்ளார் இயக்குனர் ,
படத்தில் ஒரு நல்ல கருத்தை விட்டு விட்டு தேவையில்லாத காதல் காட்சிகளை வலுகட்டயமாக திணித்ததால் புதியதாக சொல்ல வேண்டிய விஷயத்தை கோட்டைவிட்டு விட்டார் இயக்குனர். சக்தி காக்கிசட்டை போட்டதை பார்த்த யாரோ, ‘நீங்கள் மங்காத்தா அஜித் போல இருக்கீங்க’ என கூறிவிட்டார் போல. அச்சு பிசகாமல் அஜித்தின் பாணிகளை காப்பி செய்துவிட்டு நானும் போலீஸ் தான் என ஆர்வ கோளாறாக வலம் வந்துள்ளார்.
மொத்தத்தில் படம் பார்க்கும்போது தற்காப்பாக இருப்பது நல்லது.