ரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் என்ற படத்தில் “நூறாண்டு காலம் வாழ்க....
நோய் நொடி இல்லாமல் வளர்க”... சந்தோஷம் பொங்க பாடிய பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி “சரளா அம்மா” அவர்கள் மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருகிறார் என்ற செய்தியை பத்திரிக்கை வாயிலாக அறிந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடனே அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று கூறி அவர்களுக்கு மாதம் தோறும் தனது தேவி அறகட்டளை மூலமாக ரூபாய் 5,000. (ஐந்து ஆயிரம்) தருவதாகவும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தருவதாகவும் அறிவித்து உள்ளார்.
குறிப்பு: இந்த மாதத்திற்கான தொகை 5,000. (ஐந்து ஆயிரம்)) ஐ தேவி அறகட்டளை மூலம் நற்பணி இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி அவர்கள் இன்று வழங்கினார்கள்.