அமைதியான நாயகி ஷிவதா, அவ்வபோது ஒரு கனவு காண்கிறார். அந்த கனவில் வரும் அவரது உயிரிழந்த அம்மா, தன்னுடன் வந்துவிடு, இந்த உலகத்தில் அமைதியாக வாழலாம் என்று அழைக்கிறார். இந்த கனவு காணும்போது சாலையில் ஷிவதா தனியாக நடந்து செல்லுகிறார். இதற்கிடையில் குறிப்பிட ஒரு கலரில் உள்ள பொருட்களைப் பார்த்தால் உடனே அவற்றை அபகரித்துவிடும் ஷிவதாவுக்கு இவை நடப்பதே தெரியவில்லை.
இதற்கிடையில், அவரது கணவர் அஸ்வின், அவரை மனநல மருத்தவரிடம் அழைத்துச் சென்றால், அங்கு ஷிவதா மேல் சுவரில் நடந்து மருத்துவரையே பீதியடைய வைக்க, இது தனது மனைவி ஷிவதா அல்ல, என்று புரிந்துக்கொள்ளும் அஸ்வின், அவர் யார் என்பதை தெரிந்துக்கொண்டாரா, அந்த ஆன்மா எதற்காக ஷிவதா உடம்பில் உள்ளது என்பதை கண்டுபிடித்தாரா? என்பது தான் கதை.
தமிழ் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். திரைக்கதை வித்தியாசமாக இருந்தாலும், படத்தில் இடம்பெறும் சில நடிகர்களால், படம் நம்மைவிட்டு விலகிச்செல்கிறது. அதிலும், ஆன்மாக்கள் உளவும் ஒரு பகுதி முழுவதுமே வெளிநாட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
படத்தில் ஷிவதாவுக்கு நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி அழகாக நடித்துள்ளார். அஸ்வினும் தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்திற்கு பலமாக அமைந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகள் ஏதோ கார்டூன் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் பேய்ப் படங்களில் இருந்து சற்று வித்தியாசமான பேய்ப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஷிவ் மோகா, அதை ரசிகர்களுக்கு புரியும்படி இயக்கியிருந்தால், அவரும் ஜெயிச்சிருப்பார், தயாரிப்பாளரும் பிழைத்திருப்பார்.