புதிதாக ஒரு விஷயம் செய்தால் அதை புரிந்துக் கொண்டு, தேடி போய் பாராட்டுவது திரை உலகில் சகஜம் . சிந்தனைகளும் தமிழ் சினிமாவில் ஏராளம் , பாராட்டுகளும் ஏராளம்.
ஆறு நாடுகளுக்கு சென்று , அந்த நாடுகளில் ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொருப் பாடலை வெளி இடத் திட்டமிட்டு இருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படக்குழுவினரை ஏற்கனவே உலக நாயகன் கமலஹாசன் பாராட்டி இருப்பதை தொடர்ந்து, தற்போது தனக்கென்று ஒருத் தனிப்பட்ட பாணி அமைத்து ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு பெற்று வரும் விஜய் சேதுபதியும் பாராட்டி இருக்கிறார்.
‘ என்னுடைய நண்பர் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆறு நாடுகளுக்கு பயணம் சென்று , அந்த நாடுகளில் தான் இசை அமைக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பாடல்களை வெளி இடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் , பெருமையும் கூட. ஜிப்ரானின் இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்றுக் கூறினார் விஜய் சேதுபதி.