தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூரிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததேயாகும்.
தற்போது தான் கடலூரை கவணிக்க ஆரம்பித்துள்ளனர்.ஆனால், சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலேயே அங்கு பல உதவிகளை செய்துள்ளாராம். இதை டுவிட்டரில் இவரின் ரசிகர் ஒருவர் ‘என்ன சார் கடலூரில் எங்கு சென்றாலும் உங்களை பற்றி தான் பேச்சு’ என்று கூறியுள்ளார். மேலும் இவர் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களும் உதவிசெய்து வருகின்றனர். இவர்கள் படத்தில் மட்டும் ஹீரோ இல்ல நிஜ உலகிலும் ஹீரோ தான்.