9.8 C
New York
Saturday, April 20, 2024

Buy now

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் ராஜேஷ் இணையும் திரைப்படத்தை தயாரிக்கிறது ‘அம்மா கிரியேஷன்ஸ்’

படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் இரண்டு சிறந்த இயக்குனர்கள், வெங்கட் பிரபு மற்றும் ராஜேஷ். தமிழ் சினிமாவின் இரண்டு வலுவான தூண்களாக செயல்பட்டு வரும் இந்த இருவரும், ஒரு திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது…. அப்படி ஒரு திரைப்படமாக அமைய இருக்கிறது ராஜேஷின் கதையில், வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம்.

இந்த தகவலானது, கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற ‘டூப்பாடூ ஆப்’ வெளியீட்டு விழாவில் அதிகார பூர்வமாக வெங்கட் பிரபுவால் அறிவிக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவை ‘டூப்பாடூ’ மற்றும் சென்னை 28 – II’ குழுவினர் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

“எங்களின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான தருணம்…எங்கள் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு, இதுவரை ரசிகர்கள் எங்கள் நிறுவனத்திற்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அவர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சொல்லும் விதத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டணியோடு நாங்கள் இணைந்திருக்கிறோம். நகைச்சுவை படங்களை உருவாக்குவதில் ஜாம்பவான்களாக திகழும் வெங்கட் பிரபு – ராஜேஷ் ஆகியோர் இணைந்து இயக்கும் இந்த படத்தை தயாரிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்…ராஜேஷின் கதையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை செய்து இயக்குகிறார் வெங்கட் பிரபு…. நான் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தை தயாரித்து இருக்கிறன்..தற்போது ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தை தயாரித்து வருகிறேன்… இவர்கள் இருவரின் திறமையின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையே இந்த திரைப்படம்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனருமான, டி சிவா.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE